அவுஸ்திரேலியா அடித்த ஆப்பு..


    முற்குறிப்பு: இது AUstralian Skilled Migration குறித்தானது... என்னுடைய பல நண்பர்கள் இது குறித்து என்னிடம் கேட்பதால் இந்த பதிவு.. :-)





    பல இந்தியர் மற்றும் சீனர்களின் கனவு தேசங்களில் பிரதான இடம் வகிப்பவை இரண்டு.. முதலாவது அமெரிக்கா.. இரண்டாவது அவுஸ்திரேலியா..

    கணக்கியல் மற்றும் பொறியியலில் ஆரம்ப பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதல்வகுப்பில் பாஸாகியிருப்பின் , மேற்கொண்டு படிக்க விரும்பினால் அமெரிக்கா போவதும் , அப்படி விருப்பமோ அல்லது தகுதியோ குறைவாயிருந்தால் ஒரு வருடம் தம்நாட்டில் வேலை செய்துவிட்டு அவுஸ்திரேலியாவுக்கு SKILLED MIGRATION இல் போவதும் வழமை..




    ஆனால் இன்று ( பெப் 8) அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஆற்றிய உரையை தொடர்ந்து இரண்டாவது ஓப்சனுக்கு பாரிய அடிவிழுந்திருக்கிறது..
    என்ன நடந்தது என்பது குறித்து சற்று விபரமாக ஆராய்வோம்..

    அவுஸ்திரேலியாவில் SKILLED MIGRATION மூலம் பிர எடுத்து குடியேறுவதாயின் உங்கள் பட்டப்படிப்பு குறித்த சில அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவேண்டும்.. உதாரணமாக பொறியியல் என்றால் IE AUSTRALIA என்பதாலும் கணணிப்படிப்பு என்றால் ACS ஆலும் ரெயில் சிக்னலிங் என்றால் IRSE ஆலும் என்று ஒவ்வொன்றுக்கு ஒன்று வைத்திருக்கிறார்கள்..

    நீங்கள் அந்த அமைப்புகளால் நேரடியாக அங்கீகரிக்கப்பட அவுஸ்திரேலிய அல்லது அமெரிக்க அல்லது குறித்த சில UK பல்கலைகளில் படிப்பை முடித்திரு கவேண்டும . தவறும் பட்சத்தில் , அதாவது வேறு ஏதாவது இந்திய சீன பல்கலைகளில் கற்றிருந்தால் ,நீங்கள் 1 வருடம் குறித்த துறையில் வேலை செய்து அதை CDR (competency demonstration report )எனும் அறிக்கையாக 40 ,50 பக்கங்களில் எழுதி குறித்த அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.. (கணணித்துறயாயின் CDR தேவையில்லை.. ஆனால் 4 வருட அனுபவம் வேண்டும் )

    அதை அனுப்பி ஏறத்தாழ 4 அல்லது 5 மாதங்களின் பின்னர் , குறித்த அமைப்பால் உங்கள் தகுதி அங்கீகரிக்கப்பட்ட படிவம் உங்களுக்கு கிடைக்கும்.. பின்னர் நீங்கள் நிரந்தர வதிவிட விசாவுக்கு அப்ளை செய்யலாம்.. அதற்கு elligible ஆகுவதற்கு உங்களுக்கு இமிகிரேசன் பொயிண்ட் சிஸ்டத்தின்படி 120 மார்க்கு தேவை.. (அது கணிக்கும் முறையை பின்னர் கூறுகிறேன்.. )

    அந்த விசாவுக்கு அப்ளை பண்ணியதன் பின்னர் , அதன் முடிவு வர இன்னும் ஏழு எட்டு மாதங்களாகலாம்.. நடுவில் பொலிஸ் றிப்போர்ட் அது இது என்று ஊருப்பட்ட ஆய்க்கினை செய்வார் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட CO (case officer). அதையெல்லாம் தாண்டி ஒரு மாதிரியாக விசாவை பெற்று , இங்கு எல்லாப்பிளளையாருக்கும் விழுந்துருண்டுவிட்டு , அங்கு போய் ஒரு மூன்று அல்லது நான்கு மாதம் கோப்பை கழுவ வேண்டும்.. ஏனெனில் அங்கு உடனடியாக யாரும் professional வேலை எடுத்ததாக சரித்திரம் இல்லை.. கொஞ்சக்காலம் கழுவிக்காயவைத்து பிழிஞ்சு ஊறப்போட்ட பின்பு , 15 வது இன்டவியுவில் ஒரு நல்ல வேலை கிடைத்து ஒரு வீட்டை வாங்கி அப்படி இப்படி என்று செட்டிலாகி; பின்பு அங்கிருந்து தெருவால் சிவனே என்று போகும் கங்காருவுடன் படமெடுத்து , அதை பேஸ்புக்கில் போட்டுவிட்டு இங்கிலிசில் மாறி மாறி "WOW ! SO CUTE !" என்று கமெண்ட் அடிப்பார்கள்.. இதுதான் வழமை..




    உப்படி அத்தனை கனவுகளை யும் நனவாக்கும் அந்த பாயிண்ட் சிஸ்டத்து 120 மார்க்குக்குதான் இப்போது பாரிய வெடி விழுந்திருக்கிறது..

    உங்கள் பட்டப்படிப்புக்கும் அனுபவத்துக்கும் (SOL - skilled occupation list இல் இருந்தால் மட்டும் ) 60 புள்ளிகள்.. உங்கள் IELTS RESULTக்கு 25 புள்ளிகள்.. (எல்லாக்கூறுக்கும் 7 க்கு மேல் இருக்குவேண்டும் ) .. உங்கள் வயசுக்கு 30 புள்ளிகள் ( 29 க்கு உட்பட்டதாயின் )... தொழில் MODL ( migration occupations in demand list) இல் இருந்தால் அதற்கு 25 புள்ளிகள் .. ஆகமொத்தம் 140 புள்ளிகள் வழமையாக எல்லாருக்கும் வரும்.. ஆனால் அந்த கட்டையில போன மந்திரி MODLக்கான 25 புள்ளி இனி இல்லை என்று அறிவித்து விட்டான்.. ஆகவே தற்போது எல்லார்கையிலும் 115 புள்ளிகள்தான் இருக்கப்போகிறது.. அப்போ இனி யாரும் இல் அவுஸ்திரேலியா போகமுடியாது என்றுதானே மறைமுக அர்த்தம்.?

    அவுஸ்திரேலியா அப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம்?

    பெரிய காரணம் இருக்கு... இந்த பெரும்பாலான இந்தியர்களும் சீனர்களும் SKILLED MIGRATION இல் அங்கு போனாலும் , அங்கு யாரும் இஞ்சினியராயோ எக்கொண்டனாயோ வேலை செய்வதில்லை.. காரணம் அங்கு தனிக்கட்டைகளுக்கு வருமானத்தில் 45 வீதம் வரி அடிப்பார்கள் .. கலியாணம் கட்டினால் கொஞ்சம் குறைத்து அடிப்பார்கள்.. பிள்ளை குட்டி இருந்தால் இன்னும் குறையும்.. சுருக்கமாக சொல்லப்போனால் உனக்கு தேவாயனதை மட்டும் விட்டுட்டு மிச்சத்தை கொடுப்பது மாதிரி கொடுத்து பின் தானே உறுஞ்சிவிடும அந்த நாடு..

    இது நம்மாக்களுக்கு பிடிப்பதில்லை.. ஆகவே , பதிவு செய்யாத, கணக்கு காட்ட தேவையில்லாத தொழில்களில் இறங்கி காசு அள்ள ஆரம்பித்தார்கள்.. உதாரணத்து டக்சி ட்ரைவிங்.. முடிவெட்டுதல் ,சொதிக்கு பாலூத்துதல் (அதுதாங்க சமையல்) போன்ற குறைவான திறமையுடைய வேலைகள‌ை GSM இல் சென்றவர்கள் செய்யவே , அங்கு திறமையாளருக்கான தேவை அதிகரித்தே காணப்பட்டது..

    இதென்னடா புதுக்குழப்பம் என்று அதிகாரிகள் தலைய சொறிந்து கொண்டிருக்கையில் சென்ற வரும் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் பேர் போய்ச்சேர்ந் விட்டார்கள்..ஆகவே தற்போதுள்ள முறையில் ஏதாவது மாற்றம் கொண்டுவருவதற்காக தற்காலிகமாக மறைமுகமாக SKILLED MIGRATION ஐ நிறுத்தியுள்ளார்கள்..

    ஆனால் சீனாவிற்கான அதிகரித்த வழங்கலை தேவையை சமாளிக்க புதிய தொழிலாளர்கள் தேவைப்படும்.. ஆகவே நிலமை மறுபடியும் வரும் ஏப்ரல் இறுதியில் சரியாகும் என் பலர் நம்புகிறார்கள்.. பார்க்கலாம்..


    ஆனால் இந்த பிரச்சனைக்குரிய 120 பொயிண்ட் பற்றாக்குறையை உடைக்க ஒரு வழியிருக்கிறது.. NAATI என்ற பரீட்சை றையில் ஒரு தமிழ்மொழிப்பரீட்சையை எடுத்து பாஸ் பண்ணினால் எக்ஸரா ஒரு 5 பாயிண்ட் கிடைக்கும்.. ஆகவே 115 +5 = 120 வந்துவிடும்.. அல்லது உங்கள் நெருங்கிய உறவினர் யாராவது அவுசியிலிருந்து ஸ்பொன்சர் செய்வாராயின் மொத்தமாக வெறும் 100 பொயிண்ட் போதுமானது.. ஏதாவது வழி நண்பர்காள் டோன்ட் வொறி பி ஹப்பி..


    ஆனால் SKILLED MIGRATION PROCESS ஆனது ஏறத்தாழ 4 இலட்சம் ரூபாய் முதலீட்டில் நடைபெறுவது.. ஆகவே சற்று பணத்தில் றிஸ்க் எடுப்பவர்கள் சிந்தித்து முடிவெடுங்கள்..

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…உதெல்லாம் இலங்கையில இருப்பவனை எள்ளளவும் பாதிக்காது.. சடாரெண்டு ஒரு கோர்சுக்கு அப்ளிக்கேசன போட்டுட்டு அங்க ய்ச்சேர்நதிடுவாங்கள்.. அங்க எங்கயாவது ஒரு அவுஸ்திரேலியன் பொலீசை கண்டவுடன “அண்ணாத்தே ! ஐ வோண்ட் அசைலம் “ எண்டு கொப்பிய கீழபோட்டுட்டு கையை தூக்கிடுவாங்கள்..

    கோஸ் பீயும் றிடேர்ன் பண்ணி மாசாமாசம் செலவுக்கு காசும் தந்து ப்ரியா படிப்பிச்சும் விடுவாங்கள் அப்பாவி அவுஸ்ரேலியங்கள்.... உள்ள போகும் வரையும்தான் நம்மாளுக்கு சிக்கல்.. போட்டானோ? ப்ரைம்மினிஸ்டருக்கே பப்பாப்பழம் தீத்துவாங்கள்..

    உப்பிடி என்னுடைய நிறைய்ய நண்பர்கள் இப்போ அவுசியிலதான் ஜம்மெண்டு இருக்காங்க.. இப்போ ஒரு குரூப்பு அவுசி ப்ளானுக்காக மலேசியா போய் நிக்குது.. ப்ளான் சக்சசாகி அசைலம் குத்திட்டானுங்கன்னா உங்களுக்கு அந்த கதைய விலாவாரியா சொல்றேன்.. அவங்களுக்கா கொஞ்சம் ஆண்டவனை வேண்டிக்குங்க.. :P




    :-)

    P:S -

    Recent MODL changes

    From 8 February 2010 all MODL occupations are removed from the MODL. Therefore, all applicants who lodge an application on or after this date will not be eligible for the award of MODL points unless the applicant:

    • holds a subclass 485 (Skilled-Graduate) visa or has applied for a subclass 485 (Skilled Graduate) visa and is yet to apply for a permanent or provisional General Skilled Migration (GSM) visa
      or
    • on 8 February 2010 had a pending application for a GSM visa.

    Refer :
    Recent MODL changes


    Ausie Migration Ministers site: http://www.minister.immi.gov.au/


    அடிக்கடி ஒரு ஜீவன் : இன்று Weasel






    "OH MY SAMPALEEEEEEEE!"

    ராசம்மா கத்திய கத்தலில் காக்காய் ஒண்டுக்கு ஹாட் அட்டாக் வந்துவிட்டது. மரத்திலிருந்த 50க்கு மேற்பட்ட காக்காய்களும் கத்தியவாறே படபடவென்று அலமலக்கப்பட்டன..
    ஓடிவந்த ராசம்மா வாயைப்பொத்தியவாறு மண்டியிட்டாள்..
    அவள் முன்னால் சாம்பலி செத்துக்கிடந்தாள்..
    தொண்டை குதறப்பட்டிருந்தது..


    சாம்பலி ஒரு ஊர்க்கோழி.. நேற்றுத்தான் தனது 3வது முட்டையை இட்டிருந்தாள்.. இரவு கோழிக்கூட்டினை அடைக்கும் போது ,கோழிகளை எண்ணி சரிபார்க்க மறந்து விட்ட ராசம்மா , இப்போது அநியாயமாக கொல்லப்பட்ட சாம்பலியை சடலமாக பார்த்து அழுது கொண்டிருந்தாள்.. எப்போதும் தன் காலைச்சுற்றிவரும் சாம்பலி செத்த கோபத்தில் திடீரெண்டு கத்தினாள் ....

    “நாசமாப்போன சனியனேஏஏஏஏ! உன்னை பிடிச்சு உரிக்காம விடமாட்டன் ”

    மறுபடியும் ஒரு காக்காய்க்கு ஹாட் அட்டாக் வந்து விட்டிருந்தது..


    அதேவேளை அந்த சனியன் , அதுதாங்க நம்ம வில்லனுக்கு ராசம்மா வைச்ச பெயர், பழைய தபால் பெட்டியொன்றுக்குள் குஜாலாக இருந்தார்..
    அவர் ஒரு மரநாய்..
    ஆங்கிலத்தில் weasel என அழைப்பார்கள்…






    ICE WEASEL

    Mr.சனியனுக்கு இப்போ சாப்பாடு சரியா கிடைப்பதில்லை.. அவர் வழமையாக சாப்பிடும் எலி ஓணான்கள் அவரது ஏரியாவில் அருகிவிட்டன.. அதிஸ்டவசமாக நேற்று மாமரத்தடியில் சென்று கொண்டிருந்தவேளை , சாம்பலி தூங்கிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டுவிட்டது.. நைசாக ஏறி கழுத்தை கடித்து சூடான ரத்தத்தை குடித்துவிட்டு உடம்பை மறைவிடத்துக்கு இழுத்துச்செல்லும் வேளை ராசம்மாவின் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே பாதியில் ஓடவேண்டியதாகிவிட்டது..


    இப்போ ராசம்மாவின் சபதம் , Mr.சனியனை பிடிக்கும் அவளது பழைய பல சபதங்கள் போல காற்றில் வந்து அந்த மரநாயை கடந்து போனது…



    மரநாய்கள் Mustelidae குடும்பததை சேர்ந்தவை..அந்த குடும்பத்தில் உதாரணங்களாக martens, badgers, river otters, ferrets, skunks போன்ற விலங்குகளை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்..




    MARTEN



    BADGERS

    RIVER OTTERS

    வளர்ந்த மரநாய்கள ஒரு அடியிலிருந்து இரண்டு அடிவரை வளர்க்கூடியவை.. பெரும்பாலும் வளைகளில் வசித்தாலும் பெட்டிகளிலோ மரப்பொந்துகளிலோ அடர்ந்த பற்றைகளிலோ கூட வசிக்கக்கூடியவை.. சிறுசிறு பிராணிகளை உணவாகக்கொள்ளும் இவை சிலவேளைகளில் பறவைகளையும் அவற்றின் முட்டைகளையும் உணவாகக்கொள்கிறன.. poultry farm வைத்திருப்பவர்களின் பிரதான எதிரியியாகிய இது ஒரே தடவையில் பல இலக்குகளை கொன்று அவற்றின் உடலங்களை பிற்கால தேவைகருதி சேகரிக்க முயலும்.. தலையில் அல்லது கழுத்தில் தாக்கி இரையின் சூடான குருதியை குடித்தபின்னர் தன் மறைவிடத்துக்கு இழுத்துச்செல்ல முயலும்…

    தினமும் 25 மிலீ அளவிலான நீர்த்தேவை இவற்றுக்கு உண்டு.. ஆகவே அருகாமையில் நீர்வசதி உள்ள இடமாவே தமது கூட்டை அமைத்துக்கொள்ளும்.. தமது மேய்ச்சல் அல்லது வேட்டைப்பகுதியாக தம் வளையிலிருந்து 40 ஏக்கர் பரப்பளவை வரையறுத்துக்கொள்ளும்.. பெண் மரநாய்கள் 9மாத கர்ப்பத்திற்கு பின்னர் 6 தொடக்கம் 9 குட்டிகளை ஈனும்.. அவை வெறும் 4 மாதங்களில் வேட்டைக்குத்தயாராகி பின்னர் ஓரிருமாதங்களில் இனவிருத்திக்கும் தயாராகிவிடும்..

    இவை ஏதாவது பிராணிகளால் தாக்குதலுக்குள்ளாகும் போது ஓரு தாங்கமுடியா நாற்றத்தை வெளிவிடும்.. அதுவும் இவையது சகோதராமான ஸ்கங்க் தன்னுடைய காசை அடித்தால் நாற்றம் தாங்க முடியாமல் மனிதர்களே மூர்ச்சை போட்டுவிடுவார்கள்.. சக்கை நாற்றம் பிடித்த பிராணிகள் இவை.. ( இதே டெக்னிக்கைதான் கழுதைப்புலிகளும் கையாளும்.. சிங்கம் கூட முருகா என்று கத்திக்கொண்டு மூக்கைச்சீறியபடி ஓடும்.. )

    SKUNKS

    இவற்றுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.. ஏதாவது மூக்கில்லாத பாம்புகள் பிடித்து விழுங்கினாலொழிய மற்றும்படி இவை உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருக்கிறன.. இது எல்லாம் அந்த Mr.சனியனுக்கு தெரிந்திருந்ததால் சாவகாசமாக அன்று இரவும் வேட்டைக்கு புறப்பட்டது..


    மரநாய்கள் வேட்டைக்கு ஒருநாள் சென்ற இடத்துக்கு அடுத்த நாள் செல்வதில்லை.. ஆகவெ Mr.சனியன் பாத்ரூம் பக்கமாகபோய் நெல்லு மூட்டை அடுக்கிவைக்கப்படும் இடமாக சென்றது.. எங்கோ எலிவாசம் அடிப்பதை அதன் மூக்கு உணர்ந்ததும் விறுவிறுவென்று அந்தப்பக்கமாகச்சென்று ஒரு குறுகிய நுழைவாயிலூடே ஒரு பெட்டிக்குள் புகுந்தது.. அங்கே ஒரு எலியொன்று கட்டிப்போடப்பட்டிருந்தது..பாய்ந்து எலியை கவ்வியகணத்தில் வந்த வாயிலிலின் முன்னே படீரெண்டு ஏதோ விழுந்து அடைக்க ராசம்மாவின் மகன்மார் செய்து வைத்த பொறிக்குள் அகப்ட்டுக்கொண்டதை உணர்த்து சீறியபடி சுற்றிசுற்றி Mr.சனியன் ஓடலானது..
    கடைசியாக ராசம்மாவின் சபதம் நிறைவேறும் வேளை நெருங்கியருந்தது.. ஆனால் ராசம்மா தன் மூக்கை முருகப்பெருமானுக்கு நேர்ந்து வைத்துவிட்டு சபதகாரிய்ஙகளில் இறங்கிருப்பாள் என நம்புவோமாக..

    மரநாய்கள் துணிச்சல் மற்றும் ஆர்வமுடையவை.. அதைவைத்துத்தான் அவற்றை பொறிவைத்து பிடிப்பார்கள்.. மேலேயுள்ள படங்களை பார்த்துவிட்டு ஆஹா பிடித்தால் கொண்டுபோய் வீட்டில் வடிவுக்கு வைக்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு செய்தி..

    மேலே காட்டப்பட்டவை வெளிநாட்டு PR உள்ள மரநாய்கள் ...
    நம்ம லோக்கல் மரநாய்கள் இப்பிடித்தான் இருக்கும்.. வளர்ப்பமா? :P


    I
    I
    I
    I
    I




    ஆங்?


    Similar Earlier Posts
    *********************************

    அம்மாளாச்சி தாயே!


    தலைப்பை பாத்திட்டு சிறுகதை அப்பிடி ஏதாவது நினைச்சீங்களெண்டால் நான் பொறுப்பில்ல..
    இந்த வசனம் சின்ன வயசில பொம்மர் குத்தும் போது எங்கட அப்பம்மா கத்துவது.. அதாலதான் என்னுடைய ஒரு கட்டுரைக்கு இப்பிடி ஒரு தலைப்பு.. இங்க நான் கதைக்க போறது சமயபாடம் சிறுவயதில நமக்கு தேவையா என்பதை பற்றித்தான்.. ஆறுதலா தலைப்புக்கும் உள்ளடக்க த்துக்கும் லிங்க் எடுப்பம்.. இப்ப தொடர்ந்து வாசியுங்க..

    நான் படிச்சது ஒரு கிறஸ்தவ பள்ளிகூடம்.. அங்க 98 வீதம் சைவர்கள்தான் படித்தாலும் கோயில் கிடையாது ஒரு சேர்ச் உண்டு.. புதன் கிழமைகளில் ப்ரேயர் எண்டு கிறஸ்தவ மாணவர்கள் சேர்ச்சுக்கு சென்று விட ,சைவர்கள் எல்லாரும் பெரிய மண்டபமொன்றில் கூடி தேவாரம் பாடி ,ஏதாவது ஒரு நாயனாருடைய கதையை வாசிச்சு , எவராவது பக்திப்பழத்தை கூட்டியாந்த ஒரு பிரசங்கத்தை வைச்சு, எல்லாரையும் காலங்காத்தால நித்திரையாக்கிட்டு ஒரு மணித்தியாலம் கழிச்சு கொட்டாவிவிட்டபடி கிளாசுக்கு போவம் .. இதைப்பார்த்து கடுப்பான எமது அதிபர் (அவர் சைவராயிருந்த கிறிஸ்தவராகியவர்) உடனடியாக தான் களத்திலிறங்கி நிகழ்ச்சி அட்டவணையை தானே தயார் செய்தார்.. பெரும் எடுப்புகளுடன் புதிய மிரட்சியூட்டும் கள அமைப்புகளுடன் ஒரு புதன்கிழமை நிகழ்வு ஆரம்பமாயிட்டு..

    முதலாவது ப்ரோக்கராம் பட்டி மன்றம்.. என்டா தலைப்பென்று பாத்தால்
    ”சிறந்தவர் யார்? சம்பந்தரா? அப்பரா ? சுந்தரரா?" ”




    முக்கோணப்பட்டி மன்றமாம்.. புது அப்ரோச்சாம் எண்டு வெளிக்கிட்டு முதல் பத்து நிமிசம் தேவாரம் கீவாரம் எல்லாம் பாடி ஒழுங்காத்தான் பொச்சு.. பிறகுதானே பிரச்சினை பூதாகாரமா வெளிகிட்டிச்சு..
    முதலில தத்தமது நாயனாரின் பெருமையள சொன்னவங்கள் பொயிண்ட்ஸ் பற்றாக் குறையால மற்ற நாயன்மாரை எல்லாம் தாக்க வெளிக்கிட நாயன்மார் வரலாறு நடு ஹொலில கிழிஞ்சு தொங்கியது..

    ”டேய் .. பதினாறு வயசில கலியாணம் கட்டுறது க்கு அலைஞ்ச கபோதி அவன் .. கள்ளப்பால் குடிச்ச கஸ்மாலம்.. அவனுக்கு வக்காலாத்து வாங்கிறியா நீ?”

    ”டேய் அவன் கிழட்டுப்பயல் ! களவாணி ! சமண சமயத்தில இருந்து வயித்தாலடி வந்துதாண்டா ஓடியாந்தவன்.. அவனுக்கு சப்போட்டா நீங்களெல்லாம் ஒரு டீம்.. நம்ம ஆள் வைச்ச பெயர்தான்டா அப்பர்.. மருள்நீக்கியெண்டு கேட்டால் ஒருபயலுக்கும் தெரியாது.. ஒரு கதவைத்திறக்குவே நம்ம ஆள் வரணும்.. இதுக்குள்ள பெருசா வந்திட்டின..”

    திடீரெண்டு எழுந்த இந்த வாத்தால் எல்லாரும் ‌ ஹோஹோ எனச்சிரிக்க , இது என்னடா புதுசா இருக்கே பெடியங்கள் சிரிக்கிறாங்கள் எண்டு கடைசி சீட்டிலிருந்து தூங்கிக்கொண்டிருந்த மௌலீ வாத்தி எழும்பி , சுதாரித்து , நிலையை விளங்கி , மேடைக்கு ஓடிச்செல்வதற்குள் எல்லா நாயன்மாருக்கும் கள்ளக்காதலிகள் உருவாகியிருந்தார்கள்..

    அன்றைய அந்தச்சம்பவம்தான் எனக்கு சமயம் குறித்தான எதிரான சில கருத்துக்களை விதைத்தது.. ஏன் நாம் சமயத்துக்கு எதிராக சிந்திக்காமல் அதன் வழியிலேயே சிந்த்திக்கிறோம் என்று ஒரு வினா தொடுக்கப்பட்டது.. இப்போது அது ஒரு உச்சமாக பல தேடல்களுக்கும் குழப்பத்துக்கும் வழிவகுத்துள்ளது..

    சிறுவயதில் பொய்சொல்லாமல் களவெடுக்காமல் இருக்க இந்த சமயமும் சாமியும் எனக்கு பயமுறுத்தி வழிநடத்திச்சென்றனதான்.. அதை மறுப்பதற்கில்லை.. அதற்காக அத்தனை புளுகுக்கதைகளையும் ( உதாரணத்துக்கு பிள்ளையார் டான்ஸ் ஆடி நிலா தேய்ந்த கதை) புகழ்பாடும் தேவாரங்களையும் கற்பித்து பின்னர் அதை ஒப்பிக்க தவறும்போது கிளுவம் தடிகளால் எங்கள் மீது ட்ரம்ஸ் வாசித்து எத்தனை கொடுமைகளை செய்தார்கள்.. இப்போது நினைத்தால் பல்லெல்லாம் நறுமுகிறது.. அந்த நேரத்தில் ஐந்தாறு பாரதியார் பாடல்களை படிப்பித்திருக்கலாம்.. ஏன் அப்படிச்செயகிறார்கள்? இந்த ஐடி யுகத்திலும் சற்றும் சிலபஸ் மாறாமல் சமயபாடம் இருக்கிறது .. சரி அப்பிடி இரந்தாலும் அதை ஏன் ஒப்சனல் பாடமாக மாற்றக்கூடாது..


    எங்களுக்கு கோயிலுக்குப்போகும்போது எப்படிப்போகணும் எண்டு 2ஆம் ஆணடில சொன்னவங்கள்.. குளித்து புத்தாடை அணிந்து பூு எல்லாம் கொண்டு கோபுரத்தை கண்டா அதுக்கொரு சலூட் அடிச்சிட்டு உள்ள பொகணும் எண்டு.. அப்பிடித்தான் அண்டைக்கும் 42வது லேனுக்கு பக்கத்தயும் பளிச்சுபளிச்சசெண்டு குமரியள் பொக நானும் என்னடா புதுக்கோவிலாக்கும் எண்டு எண்ரியை குடுத்துட்டன்..

    உள்ள போனா ஒரே சனம்..
    ப்ரொஜக்டரில அம்மாவகவான் புருசன் சகிதம் சுவரில விழுகிறா..



    ஒருத்தர் சூமிங் சரி பண்ணுறார்.. இன்னொருத்தர் சும்மா 7 வே சப் வூபர் சறொண்டிங் சிஸ்த்தில bass ஹையா வைச்சு பக்ரௌண்ட் மியுசிக் குடுக்கிறார்.. ஏதோ றிமிக்ஸ் பக்திப்பாட்டாம்.. நான் பொலோ பண்ணிப்போன பிகருங்களெல்லாம் சும்மா ஜம்பிங்கில , சின்ப்பிள்ளையள் நேசரில றைம் சொல்வது போல முணுமுணுத்தபடி ஆடி ஆடி கும்பிடுதுகள்..

    இருந்தாப்போல ஏதோ தீபம் காட்டப்போறாங்களாம் எண்டு சனம் அடிபுடிப்ப‌ட , நானும் ஏதோ LED பல்பில செஞ்ச பஞ்சாராத்தியா இருக்குமோ எண்ட நப்பாசைல எட்டிப்பாத்தன் ..
    பாத்தா
    பழைய டெக்னிக்குதான்..

    கற்புரப்புகை ப்ரொஜெக்டர் ஒளிபட்டு பூதாகாரமாய் பின்னால் விழுந்தது.. முன்னுக்கு அடிபட்டு பஞ்சாராத்தியை தொட்டதுகளெல்லாம் பத்து பதினைஞசு வயசுக்குள்ள உள்ளதுகள்.. ஏதோ கவலையா இருந்திச்சு..



    சமயம் படிப்பிங்க பாஸ் பிரச்சனையில்ல.. எது எது நெறியில்லை எண்டு சொல்லிகுடுங்க.. நீங்க கடைப்பிடிக்க வேண்டிய நெறி எப்பிடியிருக்கணும் எண்டு சொல்லி குடுங்க.. அத்தோட கடவுளை வைச்சு ஏமாத்துறவங்களை எப்பிடி கண்டுபிடிக்கணும் தண்டிக்கணும் எண்டு சொல்லிிக்குடுங்க .. எங்கட பழைய சமூகம் விட்ட பிழையளாலதான் பல முடிச்சவிக்கிகள் அப்பாவி சனங்களிண்ட காசுகளை சுருட்டுறாங்கள்..

    எனக்குப்பயம் எவனாவது அம்மா பகவான் பக்தன் புத்தகவெளியீட்டு திணைக்களத்தில இருந்தால் , விரைவில அவா ஸ்கைப்பில குடுத்த உரைய ஆண்டு ஒண்டு சமய புத்தகத்தில பப்ளிஸ் பண்ணிடுவாுனோ எண்டதுதான்..
    பாப்பம்..

    அம்மாளாச்சி தாயே காப்பாத்து!


    பிகு: 60 வயதுவரைக்கும் தேடிவிட்டு அதுக்கப்புறமும் விடைகிடைக்காமல் உயிரோட இருந்தா மறுபடியும் சைவசமயத்திடம் சரணடைவதே என் திட்டம்..ஹிஹி