ககூனமடாட்டா




    யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்பிளக்கத்தொடங்கினது அப்பத்தான்.. அதில லயன்கிங் 1.5 எண்ட படத்தில ககூனமடாட்டா எண்ட ஒரு வசனம் வரும்.. அப்பிடீன்ன கவலையே இலலாமைன்னு அர்த்தம்.. அதை அடையிறதுக்கு see beyond What you See ங்கிறதுதான் தாரக மந்திரமாம்னு ஒரு கிழட்டுக்குரங்கு சொல்லும்.. அது மனசில ஆழமா பதிஞ்சிட்டுது..




    நீ இப்ப உனக்கு கிட்டவா தெரியிற இலக்குகளை மட்டுமல்லாமல் , அங்கால தள்ளி தெரியிற இலக்குகள‌ையும் பாக்கணும்.. அதுதான் அந்த வசனத்தோட தார்ப்பரியம்..

    செஸ் விளையாட்டை எடுத்துக்கொண்டீங்களெண்டால் ஒரு மூவ் பண்ணும் போது அதுக்கடுத்த 64 மூவ் பற்றி சிந்திக்கவேணும்.. ஒரு எக்சாமுக்கு காசு கட்டிறீங்களெண்டால் பைனல் எக்சாம் வரைக்கும் போக வசதிவருமா எண்டு யோசிக்கணும்..

    அப்பிடி யோசிச்சு வாழ்ந்தா நிச்சயம் லைப் நல்லாத்தான் இருக்கும்.. இருபத்தைஞ்சு வயிசில நல்ல வேலைக்கு போய் , சொந்தக்காசில அம்மாவுக்கு சாறி எடுத்துக் குடுக்கணும் , நம்ம பக்கத்து வீட்டு பிகருக்கு பவுடர் வாங்கி குடுக்கணும் , எண்டு விதவிதமா யோசிச்சு ஓலெவல் படிக்கிறதில ஒரு சுகமப்பா..
    ககூனமடாட்டா! :)

    இப்போ 25 வயசாயிடுச்சு.. நல்ல வேலைக்கு போயாச்சு.. அம்மாவுக்கு சாறியும் எடுத்து குடுத்தாச்சு.. ( ஆனா பக்கத்து வீட்டுக்கு பிகருக்குதான் எவனோ கிழவாடி கனடாவிலருந்து வந்து பவுடரப்போட்டுட்டான்.. அதை விடுங்க.. :( ) ..

    இப்போ இந்த வயசில கலகல ஜலஜல எண்டு இருக்கும்போது , ட்ரிப்புகள் போகும் போது, ஜாலியா இருக்கும்போது , ரோட்ல டைட் டீசேட் போட்டு மசில்ச காட்டி நடக்கும் போது , பிகருகள் ரகசியமா பாக்கிறதை ரசிக்கும்போது , இதுதான்டா சொர்ககம் எண்டு புல்லரிக்கும்.. எதையும் சாப்பிடலாம் , எதையும் ரசிக்கலாம், பாடலாம் ஆடலாம் பகிடிவிடலாம், டெங்கு நுளம்பு வந்தா ஏய் இங்க குத்தேன் ஏய் இங்க குத்தேன் எண்டு லுலுலாயி காட்டலாம்.. மதர் மதர்ப்பு தெனாவட்டு இளரத்தம்.. அப்பிடி வாழ்க்கை இனிக்கும் போதுதான் குறுக்கால ஒரு கிழவன் போனான்.




    கால்மூட்டெல்லாம் தேஞ்சு, 2 தரம் பைபாஸ் செஞ்சு, வாதம் வந்து , கண்பார்வை போய், பின்னாடி வாற ஓட்டோக்காரன் ஹோண் அடிச்சது கேக்காம அவன் கிட்ட ” கிழட்டு முண்டம் வயசானா வீட்ட கிடந்து சாவுறதுதானே ” எண் பேச்சு வாங்கிட்டு தட்டுத்தடுமாறி விழப்பாத்து என்னில தாங்கிப்பிடிச்சிட்டு பரிதாபமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு தாண்டிதாண்டி போனான்..

    ஒருவித இனம்புரியாத அதிர்ச்சி..
    மறுபடி கனகாலத்துக்கு பிறகு ககூனமடாட்டா ”.

    வயசு போய் மண்டையப்போடுறது ஒரு கரையா இருந்தாலும் , அதில எத்தினை பிடுங்குப்பாடுகள்? வாழ்க்கை சந்தோசமா இருக்க காரணமான சகல சாமானும் ஒரு 50 வயசில போக தொடங்கிடும்.. கண்ணு , காது , மூக்கு , நாக்கு எண்டு எல்லாம் ப்யுஸ் போய் , இப்போ தேக்கு இருக்கிற பாடி , பின்னாடி சக்கு மரத்தில செஞ்ச பாத்ரூம் கதவு மாதிரி ஆயிரும்..

    ஆகவே அதே ககூனமட்டாட்டா ..... இப்போ சந்தோசமாயில்ல..

    நாமளும் தூரத்தில வாற ஆள் மங்கலா தெரிய நொண்டி நொண்டி உடம்பெல்லாம் நோக கிட்டபோய், ? என்ன மோனை சொன்னனீஈஈஈ?” எண்டு வாய்கிழிய ‌ கத்திறத நினைக்க வயத்த கலக்கிச்சு..
    எமன் எல்லாம் எருமைக்கு ஏசி போட்டுட்டு வந்தன்னா ஒரு கம்ஃபடபிள் சீட்டா பாத்து இப்பவே ஏறி ப்போயிரலாமுன்னு கூட நெச்சேன்.. எவ்ளோ கொடுரம்.. :-o



    அப்போதான் கிட்டடியில யாழ்ப்பாணம் போனப்போ எங்க அம்மம்மா கூட கனநேரம் கதைக்க முடிஞ்சுது. ஏப்ரல் வெக்கையில யாழ்ப்பாணம் புழுங்குவதால பலாமரத்துக்கு கீழ கதிரைய போட்டு கடலைய போட்டுட்டிருந்தப்ப அந்த கேள்வியகேட்டேன்..அம்மம்மா ! வயசுபோனது உங்களுக்கு கஸ்டமாயில்லயோ ? எல்லாம் முடிஞ்சுது எண்டு பயமாயில்லயோ? பழசை நெச்சு பாக்க மறுபடி அங்க போகமாட்டமோ எண்டு கவலையாயில்லயோ? ”
    ஏதோ ஆறுதல் தேடி என்ட பயத்தை சொன்னேன்.. மனுசி 5 ஆம் வகுப்பு பாஸ் பண்ணிச்சோ தெரியல்ல.. ஆனாலும் சொன்னன்..



    வாழ்க்கையில் சில விடயங்கள் பளாரெண்டு அறையும்.. அத மாதிரித்தான் அந்த மனுசி சொன்ன பதிலும்..

    ”என்னோட இருந்த , வளர்ந்த எல்லாரும் இப்ப இப்பிடித்தானேயாடா ராசா இருக்கினம் ? எங்கட வருத்த துன்பங்களை ஆளாளுக்கு சொல்லிக்கொள்றதிலயும் ஒரு பெருமைமாதிரி இருக்கும்.. அதுவும் ஒரு சுகம்தானடா! அண்டைக்கு நம்மோட படிச்சவளிண்ட செத்தவீட்டுக்கு போகேக்க அவளிண்ட பொடிய பாத்து எனக்கு சற்று பொறாமையாயும் பெருமையாயும் இருந்திச்சு மோன.. நாம வாழ்ந்து களைச்சது காணும்.. .இனி படுக்கைப்பாயில கிடந்து சீரழியாம போற வேலைய பாப்பம்” சொன்னபடி மனுசி தேத்தண்ணி வைக்கப்போச்சு.. அந்த வெக்கையிலும் அவாண்ட பிளேண்டிய குடிக்கிறதில எனக்கு ஒரு தனிருசி தெரிஞ்சுது..


    வாழ்க்கையில அந்தந்த வயசில பலப்பலவிடயங்கள் பிடிக்கும்.. உதாரணமா 3 வயசில கலரடிக்கிற புத்தகம் வாங்கி கிறுக்க ஆசை.. அப்பிடியே 7 வயசில சின்ன ஆமிக்காரன் நிறைய வாற அந்த செட் வாங்கி தம்பியோட பிரிச்சு விளயாட ஆசை, அப்புறம் கிரிக்கட், றோட்டு சுத்துறது, அது இதெண்டு ஒவ்வொரு வயசிலயும் பலப்பல.. ஆனா இப்போ கலர் புத்தகத்தை கண்டா நிண்டு கிறுக்கதோணாது.. தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவம்.. ஏனெண்டால் வயசோட ஆசையளும் தேவையளும் மாறும்.. இப்ப நமக்கு பிடிக்கிறது பிறகு பிடிக்காமபோகும். அந்த நேரம் வேற ஏதாவது பிடிக்கும்.. இது நியதி.. நீங்களும் யோசிச்சு பாருங்க... உண்மைதானே? ஆகையால வயசு பேனாப்புறம் மனம் விரும்பிறது நமக்கு இப்ப புரியாது.. அப்ப கிடைக்கிறத வச்சு நம்ம மனம் சந்தோசப்பட்டுக்கும்.. அது சிலவேளை நம்ம கண்பார்வை குறையிறத நம்ம கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன் கூட பகிர்ந்துக்கிறதாயும் இருக்கலாம்.. ஆகவே டோன்ட் வொறி பீ ஹப்பீ....



    உண்மைதானே.. உங்களோட பெஸ்ட் பிரெண்ட றோட்டு வழில கண்டு மச்சான் இப்ப ஒண்டுமே தெளிவா தெரியிதில்ல எண்டு நீங்க சொல்ல அந்தாள் தன்ட நாரிப்பிடிப்பை பற்றி கதைக்க ரெண்டுபேரும் செத்துப்போன உங்கட ப்ரெண்டோட சேர்ந்து செஞ்ச குறும்பை நினைச்சு சிரிக்க.. நாம வாழ்ந்து முடிச்சவங்கடா எண்ட பெருமையோட றோட்டில சிரிச்சிட்டே நடக்கும்போது கிழடுங்க விழப்போகுதுங்க எண்டு தாங்கி பிடிக்க வாற இளவட்டத்தை பாத்து சிரிச்சிட்டு பொவீங்க.. இது நடக்கும் பாருங்களேன்.. :-)






    ம்ம்.. Anyway, இப்போ மறுபடியும் இனிக்குது..
    அதே ககூனமடாட்டா! :)




    ஆகவே இப்பவே நமக்கு நெருக்கமான , நம்ம கடைசிக்காலத்தில நம்ம கூட சிரிச்சிட்டே சந்தொசமா மறையக்கூடிய உறவுகளை உருவாக்கிக்கொள்ளறது முக்கியம்பா.. முக்கியமா பொஞ்சாதி புருசன் எல்லாம் கவனமா செலக்ட் பண்ணணும்.. காசுக்கும் கனடாவுக்கும் ஆசைப்பட்டு கண்ட கஸ்மாலத்தையெல்லாம் கட்டினால் கடைசிக்காலத்தில தனிய இருந்து சுறா படம்தான் பாக்கணும்.. நல்ல நண்பர்களை யும் வாழ்க்கைத்துணையையும் தேடுவதில இளமைக்காலத்தை கொஞ்சம் இன்வெஸ்ட் பண்றதா நான் மடிவெடுத்திருக்கேன்.. நீங்க எப்பிடி? ;-)



    வர்ட்டா! சேசே!
    ககூனமடாட்டா ;)


    கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3 ( strictly for men)

    கிட்டடியில பேஸ்புக்கில ஒரு பதிவு சும்மா அனல்தணலா பற்ந்துக்கிட்டிருந்திச்சு.. நம்ம பசங்களெல்லாம் பாஞ்சு பாஞ்சு பீல் பண்ணி கமெண்டு கல்கண்டெல்லாம் போட்டு "மாக்கு சுக்கர்பாக் " குக்கே (அவர்தாங்க பேஸ்புக் CEO வாம் ) சுகர் ஏற வைச்சிட்டாங்க..





    நிஜமாவே அந்த பதிவு அவ்வளவு ருசி.. நானே நாலுதரம் படிச்சேன்.. ஒரு பெடியன் கண்ணீர்விட்டு அழுதெல்லாம் இருக்கானாம்.. எல்லாரும் பீல் பண்ணப்போ எனக்கு இந்த பதிவு போடுற ஐடியா வந்திச்சு.. என்னுடைய பதிவைப்படிக்க முன்னம் எல்லாரும் கீழ இருக்கிற லிங்கை கிளிக்கி அந்த பிரபல பதிவை படிச்சிட்டு வாங்க.. அது ஒப்சன்லாம் இல்ல... கொம்பல்சறி..

    I love you-by Sainthavi


    படிச்சிட்டீங்களா? அப்பிடியே குப்பிறக்கிடந்து குமுறிக்குமுறி பீல பண்ணாம மறுபடியும் வந்ததுக்கு தாங்க்ஸ்.. இப்போ பிரச்சனைக்கு வருவம்..

    அந்த கடிதம் எழுதுற சைந்தவிதான் வயசுப்பசங்க எல்லாரும் எதிர்கால பிகரா மனசில வைச்சிருக்கிற ஒரு பாத்திரம்.. அதைத்தான் எல்லாப்பொடியங்களும் அழுது குழறி கமெண்ட் அடித்ததன் மூலம் அக்செப்ட் பண்ணியிருக்காங்க.. பட்.. அதில ஒரு விபரீதம் இருக்கு..
    ஏனெனில நிஜம் ரணமானது..

    நமக்கொரு நல்லபழக்கம், அதாவது கலியாணம் கட்டியிருக்கிற காளைங்க எதையாவது கண்டால் அதுங்களை கூப்பிட்டு ஒருக்கா மணியை ஆட்டிப்பார்ப்போம் (யொவ் கழுத்தில கட்டியிருக்கிறதைய்யா) .. முதல்ல ம்ஹூம் எண்டு முரண்டு பிடிச்சாலும் ஆத்தாக்டைசில ஆஊ எண்டு அழுதுகுழறி எல்லாத்தையும் உளறிக்கொட்டி மூக்கைச்சீறி நம்ம சேட்டுப்பொக்கெட்டில துடைச்சிட்டு போயிட்டிருப்பாங்க.. கேட்ட நாம ஆடிப்போயிடுவோம் எப்டி இருந்த மனுசன்னு இப்டி ஆயிட்டாரேன்னு ! அவ்ளோ கொடுமை அனுபவிக்கிறாங்கப்பா நம்ம சீனியர்ஸ்.. ஆகவே நாமளும் நம்மள அந்த ஓர்டியலுக்கு ப்ரிப்பேர் பண்ண உங்களுக்கு சில அட்வைசுகள் தர்றேன்..

    கடிதத்தில உள்ளமாதிரி அவா உங்கள ஏழுவருசம் லவ் பண்றது எப்ப சாத்தியம்னா - தன்னை விட தனக்கு தெரிஞ்ச எவளும் வசதியா வாழலை எண்டு தலைமைக்கு தெரியும் வரைக்கும்தான்.. தெரிஞ்சுதோ நீங்கள் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் எண்டு பாடினபடிக்கு ஏதாச்சும் பகவான் பஜனைக்கு போய் ஸ்ரெய்ட்டா சன்டீவில வரவேண்டியதுதான்..




    அப்புறம் வீட்டு வேலை செய்றது.. ஒருக்கா காலைல தேநீர்போட்டு காட்டிவிட்டால் வாழ்க்கைபூரா அந்தவேலை உங்க தலைலதான்.. உலகம் ஒரு நாடகமேடை .. குசினி ஒரு மினிமேடைன்னுட்டு , காலைல அவா கபேட்டில இருக்கிற கரப்பானலாம் செத்துவிழுகிறமாதிரி ஒரு நாறக்கொட்டாவியை விட்டுட்டுவரும்போது , வாயெல்லாம் பல்லாக , கையில காபியோட குட்மார்னிங் டியர்னுட்டே நீட்ட முடியுமாயிருந்தா 7 வருசம் அவ உங்கள லவ்வுறது 20% சாத்தியம்..




    அப்புறம் சண்டை பிடிக்கிறது.. உங்க அப்பா மூக்கால ஒண்ணுக்கு போவாராமே எண்டு வெங்காயத்தனமா சொல்லிட்டு , தான் ஏதோ சார்ளிசாப்ளின் தங்கச்சி , வேர்ல்ட் கிளாஸ் காமெடி பண்ணியிருக்கேன்கிற மாதிரி உங்களை பாத்திட்டிருப்பாங்க... நீங்களும் அதிர்சில வெளில வந்த முழியை உள்ளிழுத்து , ஐம்புலங்களையும் அடக்கி அதை வாயூடாக கடகடவென்ற சிரிப்பொலியாக வெளிப்படுத்த வேண்டும்.. ஆனா பதிலுக்கு நீங்க , அவவோட மறைகழண்ட ஆத்தா நாயின்னு நினைச்சு வளர்த்த தேவாங்கையோ , இல்லை உடும்புன்னு நினைச்சு உரிச்சித்தின்ன ஓணானைப்பற்றியோ கதையில் இழுத்தால் பரலோகத்திலிருக்கும் பரமபிதா உங்களுக்கு காது வழியாக காட்சி கொடுப்பார் , அவ்ளோதான்..





    ஆகவே ,மேற்கூறிய அறிவுரைகள் கடைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு 7வது வருடம் பாஸ்பண்ண 40% சந்தர்ப்பம் உண்டு..

    தொடர்ந்து சுதந்திரம்...
    இரவு ரெண்டு மணிக்கெல்லாம் வீடு வரும் வாலிபர்களுக்கு கலியாணம் கட்டி முதல் 3 மாசம் ஒரு புது பொழுது போக்கிருப்பதால ( ;) ) வேளைக்கு வீட்ட வரதுடியா இருக்கும்.. அப்புறம் எல்லாப்க்கத்தலயும் ஆராஞ்சு எல்லாம் அலுத்த பிறகு மறுபடியும் வெளிலமேய ஆரம்பிக்கும்போதுதான் சாப்பாட்டு சட்டி சடாரெண்டு வைபடும்.. கிச்சினுக்குள் டம்ளர் உருளும்.. பரிமாறும்போது வாய்க்குள்ள ஏதோ மந்திரம் ஓதுப்படும்.. என்னண்டு கேட்டா சில சென்மங்களுக்கு எதுக்கு கலியாணம் எண்டு குத்துமதிப்பா ஒரு கேள்விவரும்.. அப்புறம் மிச்சத்தை நான் சொல்லணுமா? இப்பவும் நினைக்கிறீங்களா 7 வருசம் தாக்குபிடிக்கும்னு? :P





    பிரெண்ட்ஸ் கூட தனியா ஒரு டூர் போகமுடியாது.. ஆனா தாங்க மட்டும் ஒபிசில டூராம் போயிக்கிறேன் அம்மா கிட்ட சாப்பிட்டுக்குங்க எண்டு காலைல தலைமாட்டில துண்டில எழுதிவச்சிட்டு போயிடுவாங்க..





    அதோட அவங்களுக்கு ஆயிரத்தெட்டு ஹோமோன் ப்ரொப்ளம் இருக்காம்.. ஏதாவது சத்தம் போட்டுட்டு திங்கக்கிழமை ஈஸ்ரோஜின் பிரச்சனைப்பா அதுதான் திட்டிட்டேன்.. நேத்து ஓஸ்ரோஜின் குறைஞ்சிடிச்சு அதுதான் குட்டிட்டேன்.. இன்னிக்கு சஸ்ரொஜின் கூடிடுச்சு (ஆங்! அது ஏதோ குடிக்கிற மாவில்ல? பரவால்ல ஒரு ப்ளோவா வருதுதானே. விடுங்க விடுங்க. ) அதுதான் லைட்டா பொடனில தட்டிட்டேன் எண்டு 30 நாளைக்கும் அவங்களுக்கு ஏதாச்சும் ஊறும்.. அதை பாடமாக்கி நம்ம பவுடர் போட்டிட்டுருப்பாங்களாம்.. ரத்தக்களரி பாஸ்.. இப்பசொல்லுங்க 7 வருசம் தாங்குமா?




    இப்பிடியே சொல்லிட்டுபோனா பதிவு பாரதம் மாதிரி ஆயிடும்.. முடிவா என்னன்னா குறித்த பதிவில இருக்கிறமாதிரி 7 வருசத்துக்கப்புறமம் அந்த சைட்லருந்து லவ் இருக்கணும்னா ஆம்பிளைங்க ஏராளமான தியாகங்களை செய்யணும்.. ஆகவே பொம்பளைங்கள குற்றம்சாட்டுவதற்கு பதிலா நீங்க காலையில நாலுமணிக்கு எழும்பி காபி போட்டு பழகுங்க மக்கா!

    மிகுதியை அப்புறமா இன்னொரு பதிவில சொல்றேன்.. நேரமாச்சு வர்ட்டா! சேலை துவைச்சு பழகணும்..

    *********************************************************

    பிகு: அந்த பதிவு மனசுள்ள லபக்குன்னு ஏறி இருக்க , அந்த கடிதம் எழுதுற அழகிய பிள்ளைன்ட படமும் ஒரு முக்கிய காரணம்.. இப்பிடி லிங்கிலhttp://www.qualityhealth.com/resources/creative/craig/images/case2-framed.jpg) இருப்பது பொல ஒரு (படத்தை போட்டிருந்தா வாசிச்வனுக்கு காலைல கண்டிப்பா கன்ஸ்டிப்பேசன்தான்..

    பிபிகு: அப்பாவி ஆண்சமூகத்துக்கு ஆதரவான அனைவரும் கட்டாயம் ஓட்டிடவேண்டும்.. செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.. வாழ்க அப்பாவி ஆணினம்..

    பிபிபிகு: ஆண்பெயரில் வரும் பெண்களுக்கு அலிபாபா சுவாமிகளின் அந்தரங்க சிடி கொரியரில் அனுப்பிவைக்கப்படும்..



    புல்லட் மிக்ஸ்



    தமிழினமே
    ஒன்றாகப்பார்த்த நீலப்படம்




    எல்லாரும் போட்டு பிழிந்தெடுத் துவிட்ட விடயம் இது.. இனி நானும் கிழிக்க வேண்டிய அவசியமில்லை... ஆனால் அந்த சம்பவத்திலிருந்து படிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது.. அவற்றை நாம் ஆராய்வோம் ..

    நித்தியின் படுக்கையறையின் உள்ளேயே கொண்டு போய் கமராவை வைத்துள்ள படியால் , அந்த மடத்தினுள் நடந்த ஏதோ உட்கசப்புகள்தான் இத்தனைக்கும் காரணம் எனத்தெரிகிறது.. எவனோ கூட இருந்து கழுவித்துடைத்தவன்தான் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறான்..

    காசு விடயங்களிலும் சரி , பெண் விடய்ஙகளிலும் சரி , ரகசியமாக ஈடுபடுவதானால் நெருங்கியவர்களை , அதிலும் அந்த ரகசியங்களை அறிந்தவர்களை ஒருபோதும் பகைக்கக் கூடாது..

    காரியதரிசியுடன் படுக்கைக்கு செல்வதும் , ட்ரைவருடன் தண்ணியடிப்பதும் உன் சந்தோச வாழ்க்கையின் முடிவென்று என் மனேஜர் ஒரு முறை சொல்லியிருந்தார்..

    நித் யாசாமி கீழுள்ளவர்களை வடிவாக கவனிக்காததோ இல்லை அந்த நடிகை யுடன் ஜல்சா பண்ணுவதை பிடிக்காத சிலர் ஆசிரமத்தில் இருந்ததோதான் இத்தனைக்கும் காரணம் என்பது என் கருத்து.. கட்டையில போனவன் கமராவை சாமியின் கவட்டிலேயே கட்டித் தொங்கவிட்டிருக்கிறான்.. எல்லாற்ற கதவையும் திறக்கச் சொன்னவர் தன்ட கதவையும் திறந்விட்டுட்டார் ... இப்ப எங்கிட்டு எப்பி‌டி என்னத்தை யோசிசிட்டு இருப்பாரோ? நானாயிருந்தால் தூக்கில் தொங்கியிருப்பேன்.. எப்படி இனி உலகத்தின் மூஞ்சையில் முழிப்பது?



    கதவைத்திற ஆனால் கவடு பத்திரம்: நித்தியானந்த பரமஹம்சர் newly updated


    எனக்கு சாமி க்கு கால் பிடித்து விட்டதோ இல்லை ஆங்கில பலான படங்களில் வருவது போல கண்டபடியெல்லாம் கசமுச செய்வதோ உறுத்தவில்லை .. ஆனால் அதை காவி உடையில் செய்ததுதான் அருவருப்பாக இருக்கிறது.. ஒரு நெறியையே அவமானப்படுத்திவிட்டான் நாசப்பயல்.. காவி துறவறத்தின் அடையாளம் இல்லையா?

    இதற்கும் முந்தி அமெரிக்கன் கழிப்பறையில் பிள்ளையார் படத்தை போட்டதற்கும் என்ன வித்தியாசம்?

    அதெல்லாம் கிடக்க, உந்த சாமியார்களி்டம் போன பொண்டுகள் , தங்கட புருசான்மாரை எப்பிடி பாக்கப்போகினம் ?.. அதிலும் சர்ச்சை புகழ் சாருநிவேதிதா என்ற எழுத்தாளர் இது குறித்து உளறியுள்ளதை ஒரு நண்பர் மெயிலில் அனுப்பியிருந்தார்.. அவற்ற மனுசியும் அந்த சாமியிண்ட ஆசசரமத்திலதான் படுத்து கிடந்ததாம்.. அதை கூச்சமில்லாம சொல்லுது மனுசன்.. அந்தாளை எல்லாம் ஏன் ஒரு கூட்டம் மதிக்குதென்று எனக்கு புரியவில்லை..

    தான்
    இவ்வளவு காலமும்
    சாமிக்கு காவடி எடுத்ததை ஒரு வரியில் ”விட்றுவிட்று ” என்று சமாளித்துவிட்டு , கள்ளச்சாமியவன் நடிகையை நக்குவதாகவும் நாசப்பயலெனவும் , உதெல்லாம் தனக்கு முன்னமே தெரியுமெனவும் சொல்கிறார் இந்த நிவேதிதா!.. உன்னை நம்பி நான் அவருக்காக பணம் செலவழித்தேன் என்று கடிந்த ஒருவருக்கு உன்னை யாரடா வாசிக்க வரச்சொன்னது என கேட்கிறார்? என்ன கொடுமை? கொஞ்சமாவது மூளையுள்ளவன்தான் மற்றவனுக்கு ஏதாவது சொல்லவேண்டும்.. உப்பிடியான சோணங்கிகளை கள்ளச்சாமிகளின் கால்நக்கிகளை கூடக்கழுவில் ஏற்றவேண்டும்...

    சரி விடுவம்.. உவங்களைப்பற்றி கதைச்சு என்னாவறது? நம்ம வேலையப்பாப்பம்!

    more and more to come

    மெயில் நண்பர்கள்



    ஆரம்பத்தில் என் ப்ளொக் மெயில் ஐடியில் ஒரு நாளைக்கு ஆககூடியது ஓரிரு மெயில்கள் வரும்.. சில வேளை கிழமைக்கணக்கில் எதுவுமே வராது .. வருவதும் , அனேகமாக யாராவது பெடியங்கள் பெண்கள் பெயரில் ஐ லவ் யு என்று அனுப்புவார்கள்.. ஆகவே நான் அதிகமாக திறப்பதில்லை.. ஆனால் இப்போ நிலை வேறு ..

    ஒரு வாரத்தின் பின் நேற்று மெயிலை திறந்தபோது எதை படிப்பது என்று தெரியாமல் FIFO முறையில் வாசித்து பதிலனுப்ப தீர்மானித்துள்ளேன்.. நெருங்கிய நண்பர்களின் மெயிலும் அதற்குள் மூழ்கிக்கிடப்பதால் அவர்கள் ஏன் பதிலனுப்பவில்லை என கடிகிறார்கள்..

    உண்மையில் இந்த பிரச்சனைக்கும் இந்த சாமியார்கள் பிரச்சனைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.. அதற்காகத்தான் எழுதுகிறேன்..

    இந்த மெயில் குவிப்பு ஆரம்பித்தது நான் மொக்கைகளிலிலருந்து வாழ்க்கைத்தத்துவங்கள் அது இது என்று சீரியசாக சில பதிவுகள் எழுத ஆரம்பித்ததன் பின்பே.. அதைப்படித்துவிட்டு ”தனக்கும் அப்பிடித்தான்..” ,” எனக்கு இப்படி ஒரு பிரச்சனை உங்களுடன் பகிர்வதில் ஏதோ ஆறுதல் ” என்று வருபவை தான் அதிகம்... நானும் அடடா நம்மை நம்பி ஏதோ அட்வைஸ் எல்லாம் கேட்கிறாங்கள் என்று உடனடியாக றிப்ளை பண்ணி விடுவேன்..

    என் பதிலில் நாலைஞ்சு கடிகளும் கட்டாயம் நடுவில் இருககும்.. இருந்தும் அவர்கள் விரும்புகிறார்கள்... இந்த திடீர் புல்லட் ஆனந்தா அவதாரம் திணிக்கப்பட்டதன் காரணத்தை நான் ஆராயத்தலைப்பட்டபோதுதான் விளங்கியது இந்த சாமியார்கள் சனத்தை திரட்டுவதன் சூட்சுமம்..

    எல்லா மனிதருக்கும் கவலை உண்டு.. அதை தீர்க்க மனிதர்கள் ஆறுதல் தேடுகிறார்கள்.. அப்படி தருபவர்களை மலைபோல் நம்புகிறார்கள்.. தமது intimate zone அனுமதிக்கிறார்கள்.. அதை சில களவாணிகள் தமக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு பணத்தை சுரண்டி கற்பை களவாடி நேரத்தை சூறையாடி கடைசியில் நடுத்தெருவில் விட்டுவிட்டு சன்டீவியில் மிட்நைட்மசாலாவில் நதிர்தினா தினனனா! என்று பாடிக்கொண்டு வருகிறார்கள்.. ஆகவே யாரையும் நம்பி உங்கள் மனக்கவலைகளை கொட்டாதீர்கள்..(என்னிடம் கூடத்தான்)

    be more careful while spilling them


    எப்படியிருந்தாலும் உந்த மெயில் flooding ஒரு வித சந்தோசமே... ஆனால் சிலர் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பார்கள்.. காமெடியாக இருக்கும் .. அதற்கு காட்டமான பதில்கள்தான் அனுப்புவேன்...கடைசியாக அப்படியானதொரு மெயிலில் ஒரு பகுதி.. ( நண்பர் மன்னிக்கவும்..:) )

    எனக்கு திருமணம் செய்ய மிகவும் பயமாக உள்ளது புல்லட்! வீட்டில்நிச்சயித்துவிட்டார்கள்.. பெண்அழகாக இருக்கிறாள்.. ஆனால் சரியான வாய் போல இருக்கிறது.. எல்லா இடத்திலும் அவளை திருப்பதிப்டுத்த முடியுமோ என அஞ்சுகிறேன்..”

    பதில்:

    இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்களுக்கு நம்ம சிலோன் மாத்ரு பூதத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன்.. :D

    சரி.. ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்.. நித்தயானந்தாவின் நீலக்கிளிப் பார்த்திருப்பிர்கள்தானே? எந்தப்பெரிய சாமி அவர்? அவரே ஆட்டுமாமிச லேகியம் போட்டுட்டுதான் பெபோமன்ஸ் குடுக்கும்போது உங்களுக்கு ஒரு சிட்டுக்குருவி லேகியமோ இல்லை ஒரு பலாக்கொட்டைக்குருவி லேகியமோ கிடைக்காமலா போய்விடும்? ‌எஞ்ஜோய் ப்ரதர் எஞ்ஜோய் .. பிள்ளைண்ட பிறந்தநாளைன்னிக்கு சொக்கா அனுப்ப மறந்திடாதீங்க ..

    இதுக்குப்பிறகும் அந்தாள் மெயில் அனுப்பினா அவற்ற வுட்பியின் போன் நம்பரைக்கேட்பதாக உள்ளேன்.. இப்பிடியான மெயில்கள் அனுப்பினா பதில் இப்பிடித்தான் வரும் குறைநினைக்காதீங்க பப்ளிக்..


    ஜாலி யால சபாரி



    கடந்தவாரம் இலங்கையின் யால வனாந்தரப்பகுதிக்கு safari ஒன்றுக்கு சென்றிருந்தேன்.. 3 தினங்கள் தங்கியிருந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவிக்க முடிந்தது.. உச்சகட்டமாக , காட்டினுள் , கரடிகள் முதலைகள் சூழ்ந்திருக்க ஒரு ஆற்றங்கரையில் டென்ட் அடித்து பாபேக்யு போட்டு ரணகளப்படுத்தினோம்.. இரவு எந்த செயற்கையுமில்லாத அந்த காட்டுப்பகுதியில் , தெளிவானத்தில் முழு நிலாவை படுத்திருந்து நெற்றிக்கு நேர்மேலே பார்த்த அனுபவத்தை சாகும் வரை மறக்கமுடியாது.. அத்துடன் யானை காட்டுபபன்றி காட்டெருமை சிறுத்தை மயில் காடை கௌதாரி , காட்டுக் கோழி , மான் , மரை , பாம்பு , அது இது என்று
    ஏராளமான மிருகங்களை அவற்றின் இயற்கைச் சூழலில் பார்க்க முடிந்தது..







    இயற்கை ரசிகர்கள் அனைவரையும் கட்டாயம் ஒரு முறை விசிட் செய்யச்சொல்வேன்.. பாதுகாப்பு அது இது என்று எதுவிதமான தடங்கலும் இல்லை.. உண்மையைச்சொல்லப்போனால் தற்போது இலங்கை அமைதியாக இருக்கும்போது மிக அழகாக இருக்கிறது..



    நாம் உணவட்டுண பீச், காலி blow hole அது இதென்று திரிந்து , ஒரு பத்து யானை நாலுமாசத்துக்கிருந்து சாப்பிடக்கூடிய சாப்பாட்டு ஐட்டங்களையெல்லாம் தின்று தள்ளியும் 8 பேர் 60000/= க்குள் சமாளிக்க கூடியதாயிருந்தது.. மிகவும் அருமை..




    பிகு: நாம் தங்கியிருந்தது http://yalaedge.com/ மிகவும் அருமையான சேவை.. சமையல் மற்றும் காம்பிங் தொடர்பான சகல வசதிகளையும் இன்முகத்துடன் செய்துதந்தார்கள்.. மிகவும் தரமாயிருந்தது..




    மிக்ஸ் நீண்டு விட்டதால் அடுத்து ஏதாவது நல்ல பதிவுடன் சந்திப்போம்.. நன்றி..